அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் தனுஷ். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான'மெட்ராஸ்' இத்திரைப்படத்திற்கு நல்ல ரீச் கிடைத்ததோடு இவரை சிறந்த இயக்குநராகவும் அடையாளப்படுத்தியது.
இதனை அடுத்து மூன்றாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.பின்பு மீண்டும் ரஜினியை வைத்தே காலா என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். இரண்டு படங்களிலும் ரஞ்சித் தான் பேச நினைத்த அரசியலை துணிச்சலாக பேசியிருந்தார்.
இதனையடுத்து ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை, இன்னொரு மாஸ்டர் பீஸாக அமைந்தது. 1980களில் சென்னையின் அடையாளமாக இருந்த குத்துச் சண்டையை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த, இப்படத்திற்கு தாறுமாறான வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் 'சார்பட்டா பரம்பரை' படத்துடன், ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியும் முடிவுக்கு வந்தது.
'சார்பட்டா பரம்பரை' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நட்சத்திரம் நகர்கிறது' வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என, ரஞ்சித் அறிவித்துள்ளார். இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில், நடிகர், நடிகை புகைப்படங்கள் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. ஏற்கனவே இந்தப் படம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படம் என சொல்லப்படும் நிலையில், தற்போது வெளியான போஸ்டரும் அதை உறுதிப்படுத்தும் விதமாக காணப்படுகிறது.
Listen News!