• Sep 21 2024

இந்த படத்துக்கு காசு கொடுத்து விமர்சனம்: பயில்வான் ரங்கநாதன் போட்டுடைத்த உண்மை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் குணசித்திர வேடங்களில் நடித்த பயில்வான் தற்போது நடிகர் நடிகைகளை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கி வருவதோடு் அதற்கு விளக்கம் அளித்தும் வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரிலீஸான படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். 

அதில் அவர் கூறியிருப்பதாவது,

எந்த படமும் விமர்சனத்தால் ஓடியது இல்லை. வலிமை படத்திற்கு ப்ளூ சட்டை மோசமாக சொன்னார். வசூல் வரவில்லையா. விமர்சனத்தை ஏன் பெரிதாக நினைக்கிறீர்கள்.

முந்தா நாள் ரிலீஸான ஒரு படம். மதுரையில் ஒவ்வொரு தியேட்டரிலும் 50 பேருக்கு காசு கொடுத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த அரசியலில் கூட்டம் கூட்ட ஒரு ஆஃப், பிரியாணி, கையில் 500 ரூபாய் கொடுப்பது போன்று கொடுத்து கூட்டிட்டுப் போய் வெளியே வந்து விமர்சனத்தை வாங்குகிறார்கள். ஓ சூப்பர், பின்னிட்டாங்க, அடேங்கப்பா. ஏன்டா விமர்சனத்தை விலை கொடுத்து வாங்குறீங்க. தயாரிப்பாளர் வாங்குறாங்க. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு எங்களை குறை சொல்கிறீர்கள். நான் நிரூபிக்கிறேன்.

காலையில் மதுரையில் 7 மணி ஷோ. காசு கொடுத்து, ஓசில டிபன் கொடுத்து, நைட்டு ஊத்திவிட்டு வெளியே வந்து சூப்பர்யானு சொல்றாங்க. அதே மாதிரி காசு கொடுத்து ரூ. 8 கோடி வசூலாச்சு. தினமும் ரூ. 10 கோடி வசூலாச்சு. நீங்களே பொய் பேசுறீங்க. என்னை குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதி இல்லை. நல்ல படங்களை நல்ல படம்னு சொல்லியிருக்கிறேன் என்றார்.


Advertisement

Advertisement