• Sep 20 2024

மருமகளுடன் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாக்கியா.. ஈஸ்வரிப் பாட்டிக்கு தெரியணும் கதை சரி போல.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் விஜய் டிவி முன்னணி வகித்து வருகின்றது. இதில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எழில்-வர்ஷினி குறித்த திருமண காட்சிகள் தான் வந்திருக்கின்றன. 


இருப்பினும் பின்பு வில்லி வர்ஷினி உடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் உயிருக்கு உயிராக காதலித்து வரும் அமிர்தா என்ற பெண்ணுடனேயே திருமணத்தை நடத்தி வைக்கிறார் பாக்கியா. இந்தத் திருமணத்தில் பாக்யா தவிர அந்தக் குடும்பத்தில் இருக்கும் வேறு யாருக்கும் உடன்பாடு இல்லை. 


இவ்வாறான விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் சுசித்ரா. இவரின் நடிப்புக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அந்தவகையில் இவர் கன்னடத்தில் 'மாங்கல்யா' என்ற சீரியலில் நடித்து தான் அதன் வாயிலாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் சிறந்து விளங்குபவர். இவரின் நடனத்தினை காண்பதற்கு என பல ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள். இந்நிலையில் இவர் தற்போது மருமகள் அமிர்தா உடன் இணைந்து வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ளார்.


இந்த வீடியோ ஆனது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.  இதனைப் பார்த்த அனைவரும் பாக்கியா நடனத்தினை வியந்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாது "மருமகளும் மாமியாரும் அடிக்கிற கூத்தை பாருங்க இது மட்டும் ஈஸ்வரி பாட்டிக்கு தெரிய வரட்டும் பிறகு இருக்கு இவங்களுக்கு' எனக் கூறி பயங்கரமாக அவர்களைக் கலாய்த்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement