• Sep 20 2024

பாக்கியா கழுத்தை நெருக்கும் சிக்கல்கள்! இனி மீள்வது எப்படி?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுவது பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி, பழனிச்சாமி சொன்ன கவர்மென்ட் கான்ராக்ட் எடுப்பதற்காக பாக்கியாவும் எழிலும் ஆபிஸிற்கு செல்கின்றனர். அங்கு உள்ளே போய் அப்பிலிகேஷன் போர்ம் வேணும் சார் என்று சொல்ல அதுக்கு பத்தாயிரம் பணம் கட்ட வேண்டும் என்று ஆபிஸர் சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து வெளியே வந்த பாக்கியாவிடம் நான் போய் பேங்க்ல பணம் எடுத்து வாறன் என்று சொல்ல இல்ல என்கிட்ட பணம் இருக்கு என்று சொல்லி வீட்டு செலவுக்கு வைத்த பணத்தை எடுத்து எண்ணுகிறார் பாக்கியா.

எனினும், இது வீட்டு செலவுக்கு வச்சு இருந்த பணம் தானே..நான் போய் பணம் எடுத்து வாரன் என்று எழில் சொல்ல மீண்டும் வேண்டாம் என மறுக்கிறார் பாக்கியா.

இவ்வாறு  பாக்கியாவுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.. 



Advertisement

Advertisement