• Sep 20 2024

பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் பாக்கியா- இன்ப அதிர்ச்சி கொடுத்த எழில் மற்றும் செழியன்- நக்கலடித்த கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

காலையில் விடிந்ததும் கிச்சனில் நிற்கும் பாக்கியா பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்.அப்போது அங்கே நின்று செல்வியும் அமிர்தாவும் ஆறுதல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.அப்போது பாக்கியா எழில் எங்கே என்று விசாரிக்க அமிர்தா ராத்திரியே அவர் வீட்டுக்கு வரல ரொம்ப வேலை என்று சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

அந்த நேரம் வீட்டுக்கு எழில் வர பாக்கியா நலம் விசாரிக்கின்றார். செராம்ப வேலையா சாப்பிட்டியா என்று கேட்கின்றார்.அப்போது எழில் அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா, நான் ஒரு வேலையா போய் இருந்தேன் என்று சொல்லி விட்டு தான் கொண்டு வந்த 5 லட்சம் பணத்தைக் கொடுக்கின்றார். நீ மட்டும் தான் எங்களுக்காக கஷ்டப்படுவியா,இதில 5 லட்சம் பணம் இருக்கு, இன்னும் 4 நாள் கஷ்டப்பட்டு உழைச்சால் மீதி 5 லட்சமும் கிடைச்சிடும் அவருடைய முகத்தில துாக்கி எறிஞ்சிடலாம் இதை பிடி என்று பணத்தைக் கொடுக்கின்றார்.


எழில் பணத்தைக் கொடுத்ததால் பாக்கியா சந்தோஷத்தில் இருக்க மறுபுறம் ஜெனி, செழியனுக்கு போன் பண்ணி பணத்திற்கு ஏதாவது  பண்ணினியா இன்னும் 5லட்சம் மட்டும் போதும் என்று சொல்ல செழியன் கொண்டு வாறேன் என்று சொல்லி போனை வைக்கின்றார். பின்னர் எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா அத்தை எங்க என்று விசாரிக்கின்றார்.

அப்போது ராமமூர்த்தி அவ மனசு சரில என்று கோயிலுக்கு போயிருக்கா வந்திடுவா என்று சொல்ல அந்த நேரம் செழியனும் வருகின்றார்.அப்போது எழில்  பணத்திற்கு ரெடி பண்ணியாச்சு இன்னும் 5 லட்சம் தான், அதை இன்னும் 4 நாள்ல கொடுத்திடலாம் என்று சொல்ல செழியன் ஏன்டா என்னை எதிலையும் சேர்த்துக் கொள்ள மாட்டீங்களா என்று கேட்கிறார்.

பின்னர் 5 லட்சம் பணத்தைக் கொடுத்து எனக்கும் தான் இதில பங்கு இருக்கு முறையா நாம தான் பணத்தை கொடுத்திருக்கோனும். இப்போ இவ்வளவு தான் இரு வாங்கிக்கோ என்று சொல்ல பாக்கியா சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார். பின்னர் பாக்கியா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அங்கு வரும் ராதிகாவும் கோபியும் பாக்கியாவை நக்கலடிக்கின்றனர்.


பணத்தை உங்களா கொடுக்க முடியாது எல்லாம் வாய்ப்பேச்சு தானா என்று தாங்களாவே முடிவு பண்ணி பேசிட்டு இருக்கும் போது பாக்கியா நீங்க ரெண்டு பேசும் பேசி முடியுங்க அதுக்கப்பிறம் நான் பேசிக்கிறேன் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement