• Sep 20 2024

திடீரென குடித்து விட்டு வீட்டுக்கு வந்த செழியன்- பழனிச்சாமியிடம் உதவி கேட்டு நின்ற பாக்கியா- எழில் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த  வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியன் தன்னுடைய கம்பெனி முதலாளியான பெண் ஒருவரைப் பார்க்கச் செல்கின்றார். அங்கு அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்ல் நடக்கிற பிரச்சினைகளைப் பார்த்தால் குடிக்கணும் போ இருக்கு என்று சொல்ல அவரும் சாராயத்தை கொண்டு வந்து கொடுக்க முதலில் மறுத்த செழியன் பின்னர் வாங்கிக் குடிக்கின்றார்.


செழியன் குடித்தவுடன் எனக்கு யாரும் இல்லை தனியாத் தான் இருக்கிறேன், உஙகளை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி செழியனின் கையைப் பிடிக்க செழியன் அவருடைய கையை எடுத்து விடடு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகின்றார். செழியன் வீட்டுக்கு வர பாக்கியா கதவைப் போய் திறக்கின்றார்.

அப்போது செழியன் பாக்கியாவைப் பார்த்தும் முதலில் பயந்தாலும் பின்னர், அம்மா நீ கவலைப்படாத இந்த வீட்டை எப்படியாவது மீட்டிரலாம் நான் உன் கூட தான் இருப்பேன் என்று சொல்கின்றார்.செழியனின் பேச்சில் வித்தியாசம் இருப்பதை அறிந்த பாக்கியா செழியன் குடித்திருப்பதை உணர்கின்றார்.

செழியனிடம் எதுக்குடா குடிச்ச என்ன புதுப்பழக்கம் இது வீட்டில தெரிஞ்சால் என்னடா நினைப்பாங்க எனத் திட்ட செழியன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சொல்கின்றார்.பின்னர் விடிந்ததும் பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று அந்த ஆடரை வாங்கித் தரும்படி சொல்கின்றார். பழனிச்சாமியும் அதற்கு ஓகே சொல்கின்றார்.


தொடர்ந்து எழில் தயாரிப்பாளர் ஒருவரை பார்க்க கிளம்புகின்றார். அப்போது அமிர்தா வந்து என்ன விஷயம் என்று கேட்க எழில் விஷயத்தை சொல்லி விட்டு எப்படியாவது பணத்தை அந்த ஆளு கிட்ட கொடுக்கணும். அதுக்காக ஏதாவது பண்ணனும் என்று சொல்லி விட்டு கிளம்புகின்றார்.

வீட்டுக்கு வந்த பாக்கியா ஆடரைப் பற்றி தன்னுடன் வேலை செய்யிறவங்க கிட்ட சொல்ல அவங்க ஐயாயிரம் பேருகக எல்லாம் சமைக்க முடியாது இதை கான்சல் பண்ணிடலாம் என்று சொல்கின்றனர்.இதனால் பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.






Advertisement

Advertisement