• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் பிரியர்களை ஏமாற்றிய டைரக்டர்! அடுத்து ராதிகாவுக்கு வளைகாப்பு தானே?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் அனைவருமே மிகப்பெரிய ரசிகர்களாக காணப்படுகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனது விடா முயற்சியினால் தனது குடும்பத்தையும் பார்த்து, தனது தொழில் ரீதியிலும் முன்னுக்கு வருகிறார். தனது பிள்ளைகள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுமுகமாக தீர்த்து வைக்கிறார்.

என்னதான் அவரது மாமியார் திட்டி தீர்த்தாலும் அவருக்கு எதிராக செயல்பட்டாலும் பொறுமையாகவும் பக்குவமாகவும் அவருக்கு நல்லது எடுத்து சொல்லவும், குடும்பம் பிரியாமல் தாங்கிப் பிடிக்கும் ஒரு பெண்ணாக பாக்கியலட்சுமி காணப்படுகிறார்.

மறுபக்கம் வளர்ந்த பிள்ளைகள் இருக்க தக்கனவாக கோபி இன்னொரு கல்யாணத்தை பண்ணி அவரையும் தனது வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார். தற்பொழுது பேரக் குழந்தைகள் கூட கண்டுவிட்டார் கோபி.


இந்த நிலையில், தற்போது கோபி வாழ்க்கையில் இரண்டாவது மனைவி ராதிகா கர்ப்பமாக உள்ளார். முதலில் சந்தோஷப்பட்ட கோபி அதன் பின்பு அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.

இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி பக்கத்தில் பழனிச்சாமி காதல் கொண்டு அலைவதும், கோபி தற்போது அப்பாவாக ஆனதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து,  மீண்டும் ஒரு புதிய அத்தியாயமாக பாக்கியாவின் காதல் கதையையும், கோபி அப்பாவான கதையையும் கொண்டு மீண்டும் புதிய களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

எனவே தற்போது வெளியான ப்ரோமோவின் படி ராதிகா கன்ஃபார்மாக கர்ப்பமாக உள்ளார். அதற்கு காரணம் நீங்க தான் என கோபியுடன் சண்டை போட, அவரும் நீ தான் காரணம் என சண்டை போடுகிறார். எனவே இதற்கு அடுத்த நிலையில் வீட்டார்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இதேவேளை, இந்த சீரியலில் அடுத்து பாக்கியா கையால ராதிகாவுக்கு வளைகாப்பு நடக்கும் என ரசிகர்கள் திட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement