• Sep 20 2024

தனது காதலியை ப்ரேக் அப் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- அட இவர் ராஜா ராணி சீரியல் ஹுரோயின் தானே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ தான் ராஜு வீட்ல பார்ட்ரி.இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸ் சீசன் 5 இன் டைட்டில் வின்னரான ராஜு நடத்தி வருகின்றார். அவருடன் ப்ரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வருகின்றார்.

மேலும் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சிக்கு சில கெஸ்ட் வருவார்கள் அவர்களை கலாய்ப்பதாகவே இந்த சீரியல் அமைந்திருக்கும். அந்த வகையில் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பபட்ட நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினரும் கலந்து கொண்டனர். அதில் எழில் என்று அழைக்கப்படும் விஷாலும் கலந்து கொண்டார்.

அப்போது ப்ரியங்கா எழில் பாக்கியலட்சுமி சீரியலைத் தவிர இன்னும் நிறைய சீரியல் செட்டுக்கு போறியாமே என கலாய்க்க அதற்கு பதில் கூறிய விஷால் அக்கா அது இரண்டு மாதங்களுக்கு முதல் ராஜா ராணி ஐ பி எஸ்சை பார்க்க போவேன். இப்போ இது ப்ரேக் அப் ஆயிடுச்சு என்று கூறினார்.

இதனை அடுத்து ராஜு பிரேக்க அப் ஆயிடுச்சா. இப்போ கேக் எடுத்து சாப்பிடுங்க என்று கூறி விஷாலைக் கலாய்த்தார். விஷாலுக்கு பிரேக் அப் ஆனதை அடுத்து ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement