விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் நடைபெறப்போவதாக கோபி நினைததுக் கொண்டு புலம்பிக் கொண்டே திரிந்தார்.
இறுதியில் பாக்கியாவுக்கு திருமணம் இல்லை பழனிச்சாமிக்கு தான் வெறொரு பொண்ணுடன் திருமணம் என்பதை அறிந்த கோபி சந்தோஷமாக இருக்கின்றார். இருப்பினும் பழனிச்சாமி அவருடைய வீட்டிற்கு வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எல்லோரையும் பழனிச்சாமி தன்னுடைய பக்கம் இழுத்து விட்டான் என செம கோபத்தில் இருக்கின்றார்.இது தவிர பாக்கியா ஒரு மாதத்திற்குள் 18 லட்சம் ரூபா காசைத் தந்திடுவேன். காசைத் தந்தால் உடனே நீங்க ராதிகாவை கூட்டிட்டு கிளம்பிடனும் என்று சபதம் போட்டிருக்கின்றார் பாக்கியா.
இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா பழனிச்சாமி சொன்ன மாதிரி ஐயாயிரம் பேருக்கு சமைக்கிறதுக்கான ஆடரை வாங்கித் தரச் சொல்லி பழனிச்சாமி வீட்டுக்குச் செல்கின்றார். அத்தோடு இதனை வீட்டில் வந்து சொல்ல ஈஸ்வரியும் அவரது கணவரும் எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுற நீ என்று கவலைப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!