• Sep 21 2024

கல்யாண வீட்டில் பாக்கியாவுக்கு எழுந்த புதுப் பிரச்சினை- ராதிகாவுடன் சென்று இனியாவை வாழ்த்திய கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியாவுக்கு எல்லோரும் சுவீட் ஊட்டி விட்டு சந்தோஷமாக இருக்கின்றனர். இனியாவுக்கு போன் செய்வதற்காக வெளியில் சென்றிருந்த பாக்கியா மண்டபத்திற்கு உள்ளே வர அங்கே பொண்ணு வீடும் மாப்பிள்ளை வீடும் சண்டை பிடிப்பதைப் பார்த்து அதிச்சியடைகின்றார். அப்போது பாக்கியா என்னாச்சு என்று கேட்க செல்வி பாயாசம் தீய்ஞ்சு போச்சு அதனால தான் மாப்பிள்ளை வீடு தங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து சண்டை போடுறாங்க என்று சொல்கின்றார்.


இதனால் பாக்கியா பயந்து போய் நிற்கின்றார். மறுபுறம் இனியாவைக் கூட்டிக் கொண்டு எல்லோரும் ஸ்கூலுக்கு கிளம்பிப் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா அம்மா மட்டும் தான் இன்னும் வரல என்று சொல்ல ஜெனி நாம ஸ்கூலுக்கு போறம்ல அங்க கண்டிப்பா ஆன்ட்ரி வந்திடுவா நீ கவலைப்படாத என்று சொல்கின்றார்.

அந்த நேரம் ராதிகாவுடன் வெளியே சென்று கொண்டிருக்கும் கோபி போன் பண்ணி இனியாவிடம் ரிசல்ட் என்ன என்று கேட்ட இனியா தன்னுடைய ரிசல்டை சொல்கின்றார். இதைக் கேட்ட கோபி சந்தோஷத்தில் அழுவதோடு ராதிகாவைக் கூட்டிக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பிப் போகின்றார்.

மறுபுறம் பொண்ணு வீட்டுக்காரர் பாக்கியாவைக் கூப்பிட்டு பெரிய சமையல்காரி என்று சொன்னாங்க ஒரு பாயசம் கூட வைக்க முடியலையா? உன்னால எவ்வளவு பெரிய குழப்பம் ஆகிடுச்சு எங்க பொண்ணு கல்யாணம் நிற்க போகுது என்று சொல்ல, பாக்கியா மாப்பிள்ளை வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்கின்றார்.இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரர் நீ பேசாம இருமா என்று சொல்லி பாக்கியாவை திட்டுகின்றனர்.


தொடர்ந்து ஸ்கூலுக்கு வரும் இனியாவை எல்லோரும் மலர் துாவி வரவேற்கின்றனர். அத்தோடு இனியாவைப் பாராட்ட அந்த நேரம் ஸ்கூலுக்கு வரும் கோபி இனியாவை கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் இவ என் பொண்ணு என்றும் எல்லோரிடமும் பெருமையாக பேசுகின்றார்.

அடுத்து கல்யாண வீட்டில் பொண்ணு வீட்டுக்காரர் உங்களால் தான் பிரச்சினையே எனப் பாக்கியாவையும் அவரது சமையல்காரர்களையும் பிடித்து ஒரு இடத்தில் இருக்க வைக்கின்றனர். நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கல என்றால் உங்களை பொலிஸில் பிடிச்சுக் கொடுப்பேன் என்றும் மிரட்ட பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement