தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.பல விறுவிறுப்பு கட்டத்தில் நோக்கி நகரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
வீட்டுக்கு வந்த பாக்கியாவால் எல்லோரும் உற்சாகமடைகின்றனர். குளிக்கப் போன பாக்கியாவை பார்த்து கோபி அதிர்ச்சடைகிறார். உள்ளே போனதும் பாக்யா கோபியை வெளியே போக சொல்கிறார். குளிச்சிட்டு டிரஸ் மாத்தணும் என சொல்ல கோபி வெளியே வந்து விடுகிறார்.
மேலும் இந்தப் பக்கம் ஈஸ்வரி பாக்கியா வந்த சந்தோசத்தில் இனி கோபியை ஒழுங்கா நடந்துக்க சொல்லணும் வேற நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடணும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி பேச்சை எல்லாம் கேட்டு கோபியின் அப்பா கடுப்பாகிறார். எல்லாம் சரியாகிற நேரம் என சொல்கிறார். ஜெனி நீ எப்பவும் பாக்கியா கூடவே இருக்கணும் அவ மனசை பேசி பேசி நாம தான் மாத்தணும் என ஈஸ்வரி சொல்கிறார்.
இந்தப் பக்கம் கிச்சனில் செல்வி பாக்கியா அக்கா இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கக் கூடாது.அத்தோடு தப்பு பண்ணிடுச்சு என சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போய் இருக்கணும். இதுக்கு அப்புறம் என்ன பண்ணும் கிச்சனுக்கு வந்து சட்னி செய்யலாமா சாம்பார் செய்யலாமானு பேசிட்டு இருக்கும்.
மத்தவங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போயிட்டு வாங்க பாக்கியா அக்காவோட மனசுல இருக்க கஷ்டம் யாருக்கும் தெரியாது. அக்கா மட்டும் வந்து பழையபடி இருந்தா நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் கிளம்பி போயிடுவேன் என கூறுகிறார்.
இதன் பின்னர் குளித்துவிட்டு வெளியே வந்த பாக்கியா பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மேக்கப் எல்லாம் போட்டு டிப் டாப்பாகக ரெடியாகி கீழே வருகின்றார். பாக்யாவை பார்த்து கோபி ஷாக்கடைந்து நிற்க ஈஸ்வரி எங்க கோவிலுக்கு போறியா கோபி நீயும் கூட போயிட்டு வா என கூறுகிறார்.
நேராக வெளியே போன பாக்கியா பைக்கில் இருந்து வக்கீல் நோட்டீஸ் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து கோர்ட்டில் இருந்து வந்துச்சு. இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும்ல என கூறுகிறார். இதனால் குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிற செய்திகள்
- பாக்ஸ் ஆபிஸில் அள்ளிக்குவிக்கும் அண்ணாச்சி… என்னது வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியுள்ளதா..?
- காதலனுக்கு தியேட்டர் கார்னர் சீட்டில் முத்தம் – உண்மைகளை உடைத்த அமலா பால்
- திடீரென சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய விஜய் சேதுபதி-எத்தனை கோடி தெரியுமா..?
- வாய்ப்பு கிடைத்தால் சமந்தா பங்குபற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்-நாகசைத்தன்யா
- ஜெயிலர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..குஷியில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!