• Sep 20 2024

பணம் கேட்ட கோபிக்கு பாக்கியா கொடுத்த அதிர்ச்சி-ஈஸ்வரி எடுத்த முடிவு-விறுவிறுப்பின் உச்சத்தில் இன்றைய எபிசோட் அப்டேட்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!




விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.


 கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொல்ல பொறுமை இழந்த பாக்கிய அந்த 40 லட்சம் ரூபாய் பணத்தை நான் தருகிறேன் என கூறுகிறார். இந்த ஒருவருடத்திற்குள் தந்து முடிக்கின்றேன்.தராட்டி நீங்க சொல்லுறதை நான் செய்கின்றேன்.


நாலாயிரம் நாற்பதாயிரம் இல்ல 40 லட்சம் அதுக்கு எத்தனை சைவர்னு உனக்கு தெரியுமா? என கோபி நக்கலாக பேச எனக்கு உங்கள மாதிரி எனக்கு நக்கலா பேச தெரியாது உங்களுக்கு தேவை 40 லட்சம் பணம் தானே அதை நான் தரேன் என சொல்ல எப்படி தருவ? எப்போ தருவ என கேட்க எப்படி ஆச்சும் தருவேன் எல்லாம் எனக்கு தெரியும். 




நீங்க இத நம்பாம கூட போகலாம் போயிட்டு பாண்டு பேப்பரை வாங்கிட்டு வாங்க கையெழுத்து போட்டு தரேன் என சொல்ல ஈஸ்வரி பாக்யா நீ தப்பு மேல தப்பு பண்ற என சொல்ல பணம் கேட்டது நான் இல்லையே அத்தை அவர் கேட்டாரு நான் தரேன்னு சொல்றேன் என கூறுகிறார்.

இதன் பிறகு கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லு அப்போ மீட் பண்ணலாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியே செல்ல இனியா, செழியன், ஈஸ்வரி என எல்லோரும் தடுத்து நிறுத்த கோபி வீட்டை விட்டு வெளியே சென்று வீடுகிறார்.



இதன் பிறகு உள்ளே வந்த ஈஸ்வரி நீ தப்பு மேல தப்பு பண்ற என்னால இதை ஏத்துக்கவே முடியாது. கோபி இந்த வீட்ல இருக்கணும். நீங்க இரண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் என கூறுகிறார். 



ஆனா நீ பிடிவாதமா நீ நினைச்சத சாதித்து விட்டாய்? திரும்பவும் கோபி இந்த வீட்டுக்குள்ள வர வரைக்கும் நீ என்கிட்ட பேசாத நானும் உன்கிட்ட பேசமாட்டேன் என கூறுகிறார். செழியன் இப்போ உங்களுக்கு சந்தோஷமா நிம்மதியா இருங்க என சொல்லிவிட்டு மேலே செல்கிறான். இனியா எனக்கு அப்பானா ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்கும்போது அவரை ஏன் வெளியே அனுப்பினீங்க எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை என சொல்லி அழுது கொண்டே மேலே செல்கிறார்.

ரோட்டுக்கு வந்த கோபி கடும் கோபத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் .மரத்தேில் காலை உதைத்தல் என்று பல சேட்டைகளை செய்து விட்டு பிறகு தன்னுடைய நண்பர் சதீஷை வரவைத்து அவரிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் கொஞ்சம் பொறுமையாக இரு யோசித்து முடிவு பண்ணு என சொல்கிறார்.

 இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி ராதிகா வீட்டுக்கு சென்று உன்னை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீ தான். நீயும் கைவிட்டாத என பேசுகிறார்.

Advertisement

Advertisement