• Sep 20 2024

தாமதமாக வந்த பாக்கியா... இனியா எடுத்த அதிரடி முடிவு... கண் கலங்கி அழும் தாயார்... பரபரப்பின் உச்சத்தில் 'பாக்கியலட்சுமி'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.  


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஸ்கூல் பெர்ஸ்ட் வந்த இனியாவுக்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடைபெறுகின்றது. ஆனால் பாக்கியாவிற்காக இனியா காத்திட்டே இருக்கின்றார்.ஆனால் பாக்கியா வரவே இல்லை. இதனால் கோபி, ராதிகாவுடன் இனியா புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்.


பின்னர் தாமதமாக பாக்கியா அந்த பாராட்டு விழாவிற்கு வருகின்றார். அவரை கண்டதும் இனியா "என்னை விட உனக்கு பிசினஸ் தானே முக்கியம், நீ எங்கிட்டப் பேசாதே" எனக்கூறிக் கோபத்தில் கத்துகின்றார். இதனைக் கேட்டதும் பாக்கியா கண் கலங்கி அழுகின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.  


Advertisement

Advertisement