• Sep 20 2024

கோபிக்கே பாடம் எடுத்த பாக்கியா... பழனிச்சாமி கொடுத்த புது ஐடியா... 'பாக்கியலட்சுமி' எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் அட்டகாசமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.


அந்தவகையில் இனியாவின் உடைய அட்மிஷன் விடயம் முடிந்து கோபி, பாக்கியா மற்றும் இனியா மூவரும் வெளியே வருகிறார்கள். அப்போது இனியா பாக்கியாவிடம் "எப்படி நான் இப்படி எல்லாம்" என்று கேட்கின்றார். பதிலுக்கு பாக்கியா "என்னை பத்தி என்ன நெனச்ச" என பெருமிதமாக கூறுகின்றார். இதனையடுத்து கோபி "ஏதாவது சாப்பிடறியா? இங்கே கேன்டீன்ல சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும்" என்று இனியாவிடம் கேட்கின்றார். அதற்கு இனியா வேண்டாம் பசிக்கல என சொல்கிறார். 

பின்னர் கோபி திரும்பவும் "விஸ்காம் படிப்பில பெரிய ஃபியூச்சர் இல்லை, குழந்தை ஆசைப்பட்டானு சொல்லி எல்லாரும் சேர்த்து விட்டுருங்க, நாளைக்கு நான்தான் சொன்னேன்னா நீங்க எடுத்து சொல்லி இருக்கலாம் இல்ல என்று அவர் கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போறீங்க" என கேட்கின்றார். 


பதிலுக்கு பாக்கியா "நான் ஒன்னும் விசாரிக்காமல் அங்க கொண்டு போய் இனியாவை சேர்த்து விடல விஸ்காம் படிப்பிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கு" என கோபியிடம் அது குறித்து பல விடயங்களை கூறி, அந்தப் படிப்புப் பற்றி ஒரு பாடமே நடத்தி முடிக்கின்றார். இதனையடுத்து கோபி இனியாவை கேண்டின் அழைத்துச் செல்கின்றார். அதேபோல் பாக்கியா காலேஜ் சுற்றி பார்க்கின்றார். பின்னர் ஒரு கிளாஸ் ரூமில் உட்கார்ந்து போர்டில் தன்னுடைய பெயரை எழுதிப் பார்த்து ரசிக்கிறார். 


இதனைத் தொடர்ந்து இனியாவிடம் காலேஜ் வந்தது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். மறுபுறம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வரும் பாக்கியா காலேஜ்ஜில் நடந்த அத்தனை விடயங்களையும் பற்றி சொல்லி "எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை ஆனால் அப்பா இறந்து போனதால் அதை படிக்க முடியல" என்று கூறி வருத்தப்படுகின்றார். 

அதற்கு பழனிச்சாமி இப்போதும் படிக்கலாம் என்று சொல்கிறார். பதிலுக்கு பாக்கியா "இந்த வயசுல எப்படி சார் முடியும்" என கேட்க, பழனிச்சாமி உடனே "108 வயதில் ஒரு பாட்டி படித்து முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறார்" எனக் கூறி அதை பற்றி சொல்கிறார். அத்தோடு ஈவினிங் காலேஜ் குறித்து சொல்ல நீங்க சொல்றதும் யோசிக்கிற மாதிரி தான் இருக்கு நான் யோசிக்கிறேன் என பாக்கியா பழனிச்சாமியிடம் கூறுகிறார்.

பின்னர் கேண்டீன் வந்த பாக்கியா செல்வியிடம் இனியாவை காலேஜ் சேர்த்தது, பழனிச்சாமி சொன்ன ஐடியா அனைத்தையும் பற்றி சொல்லி நானும் காலேஜ் போகட்டுமா நீ என்ன சொல்ற என கேட்கின்றார். அதற்கு செல்வி "சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத அக்கா" என கூறுகின்றார். 

அதுமட்டுமல்லாது "அன்னைக்கு ஏதோ சும்மா சொன்னேன் இருக்கிற வேலையில இதெல்லாம் உன்னால எங்க பண்ண முடியும்" எனவும் செல்வி கேட்கின்றார். மறுபுறம் வீட்டுக்கு சீக்கிரம் வரும் செழியன் ஜெனியின் பக்கத்தில் உட்கார்ந்து பேசுகின்றார். அப்போது ஜெனி செழியனின் மாற்றம் சந்தோஷத்தை கொடுப்பதாக கூறுகிறார். 

இதனையடுத்து வளைகாப்பு பற்றி பேசும் போது வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என்று சொல்ல, அதற்கு செழியன் அதெல்லாம் போகக்கூடாது நீங்க இங்கதான் இருக்கணும் என்று கூறுகின்றார்.

இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement