• Sep 20 2024

பொண்ணு பார்க்க வந்த இடத்தில் வெட்கப்பட்டு நின்ற பழனிச்சாமி- கோபிக்கு இனியா கொடுத்த அதிர்ச்சி- நக்கலடித்த பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று குறித்து பார்ப்போம்.

பாக்கியா தான் செய்த சுவீட்டுகளை தன்னுடைய மாமனார் மாமியாருக்கு சாப்பிடக் கொடுக்கின்றார். இதனை வாங்கிச் சாப்பிட்ட ராம மூர்த்தி பாக்கியாவின் திறமையைப் பாராட்டுகின்றார். பின்னர் ராமமூர்த்தியின் ஊர்க்காரர் பொண்ணைக் கூட்டிக் கொண்டு வருகின்றார். பொண்ணு  வந்திருப்பதை அறிந்த இனியா ஓடி வந்து அவரிடம் பேசுகின்றார். பின்பு அமிர்தாவும் பொண்ணிடம் பேசுகின்றார்.


பின் அவர்களை உள்ளே இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தவுடன் பழனிச்சாமியும் அவரது அம்மாவும் பொண்ணு பார்க்க வருகின்றனர். அவரது அம்மா மட்டும் உள்ளே சென்று எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும் போது பழனி வெளியிலேயே நின்று விடுகின்றார். பழனி வெளியிலேயே நிற்பதைப் பார்த்த எழில் பழனியை  அழைத்துக் கொண்டு உள்ளே போகின்றார்.

வீட்டில் உள்ளவர்களை பார்த்த பழனிச்சாமி வெட்கப்பட எல்லோரும் நக்கலடிக்கின்றனர். தொடர்ந்து பொண்ணு வந்ததும் ராமமூர்த்தி பெண் குடும்பத்தைப் பற்றிச் சொல்கின்றார். அந்த நேரம் பெண்ணிடம் ஏதாவது தனியாகப் பேசனுமா என்று கேட்க பழனிச்சாமி தான் பேசவில்லை என்று சொல்ல பெண், தான் தனியாகப் பேசனும் என்று சொல்கின்றார்.


இதனால் பழனிச்சமியையும் அவர் பார்க்க வந்த சந்திராவும் ஜெனி ரூமுக்குள் தனியாகப் பேசுகின்றனர். இது ஒரு புறம் இருக்க கோபி ராதிகாவின் நண்பியின் நிச்சயதார்த்த விழாவுக்கு போவதற்காக காரில் போய்க் கொண்டிருக்கின்றனர். ஆனால் கோபிக்கு மனமே இல்லை.பாக்கியாவுக்கு கல்யாணம் நடந்திருமா என்று புலம்பிக் கொண்டே போகின்றார்.

இந்த நேரம் பாக்கியா தன்னுடைய ப்ரண்டின் மகளது கல்யாணம் பற்றி பேசிட்டு வர கோபி பாக்கியாவின் கல்யாணத்தை பற்றி தான் பேசுகின்றார் என நினைத்து தவறாகப் புரிந்து கொள்கின்றார். பின்னர் அது ராதிகாவின் ப்ரண்ட் என்று தெரிஞ்சதும் அமைதியாகின்றார்.

அத்தோடு ராதிகாவும் மயூவும் ஷாப்பிங் போனதும் இனியாவிடம் போன் செய்து நிச்சயதார்த்தம் பற்றி கேட்க இனியா வீட்டில் இருந்து கொண்டு எதற்கு போன் பண்றீங்க என்று கேட்க, கோபி நா் வீட்டில இல்லை என்று சொல்ல, இனியா பொண்ணும் மாப்பிள்ளையும் தனியாகப் பேசப் போய்ட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார்.


மேலும் இனியாவை சாப்பிட்டியா என்று கேட்டு விட்டு போனை வைத்து விடுகின்றார். அத்தோடு நான் பார்க்கிற இடமெல்லாம் தனியாத் தான் பேசிட்டு இருக்கிறாங்க இப்பவும் எதுக்கு தனியா பேசுறாங்க என்று புலம்புகின்றார். மேலும் ராதிகா மயூ வந்ததும் ராதிகாவிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் என்று சொல்ல ராதிகா உங்க வீட்டுக் கதை மட்டும் சொல்லாதீங்க நான் செம கோபத்தில் இருக்கிறேன் என்று சொல்ல கோபி சமாளிதத விடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement