• Sep 21 2024

வீட்டுக்கு வந்த கோபிக்கு கறி விருந்து வைத்த பழனிச்சாமி- கடும் கோபத்தில் இருக்கும் பாக்கியா Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியவை இங்கிலீஸ் வகுப்பில் பார்க்க வந்த கோபி மோசமாகத் திட்டுகின்றார். அப்போது பாக்கியா சொல்ல வந்ததை சொல்லிட்டு போங்க என்று திமிராக நிற்கின்றார். அப்போது பழனிச்சாமி மேடம் நீங்க உள்ளே போங்க என்று பாக்கியாவை அனுப்பி வைத்து விட்டு கோபியிடம் பேசுகின்றார்.


இது பொது இடம் நீங்க பேசும் போது சண்டை பெருசாகி போலீஸ் வந்தால் பாக்கியா மேடம் உங்களைத் தெரியாது என்று சொல்லுவாங்க அப்பிறம் உங்களுக்கு தான் பிரச்சினை ஆகிடும் என்று அனுப்பி வைக்க கோபியும் பயத்தில் கிளம்பி போகின்றார். தொடர்ந்து பாக்கியா பழனிச்சாமியிடம் எதுக்கு அவரு சந்தோஷமா இருக்கிறியா என்று என்னை கேட்டிட்டே இருக்காரு என்று சொல் பாக்கியாவின் நண்பி அவருக்கு உங் மேல பொறாமை அதை எப்பிடி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் தான் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காரு என்று சொல்கின்றார்.

அப்போது பழனிச்சாமியும் இதைப் பற்றி யோசிக்காமல் இருங்க என்று பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார். தொடர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு வரும் கோபி பழனியின் அம்மாவிடம் நான் உங்க கிட்ட வந்து சொன்ன விஷயத்தை உங்க பையன் கிட்ட சொன்னீங்களா என்று கேட்க, அவர் பாக்கியா தங்கமான பொண்ணு அவளை பழனிக்கு கட்டி வைக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் நீ வந்து சொன்னதுக்கு பிறகு தான் இது பற்றியே யோசிச்சேன் என்று கூறுகின்றார்.

இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியடைந்ததோடு இது என்னோட விஷயம் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று கிளம்ப அந்த நேரம் பழனிச்சாமி வந்து கோபியிடம் நக்கலாகப் பேசுகின்றார். அத்தோடு கோபியை அழைத்துச் சென்று விருந்து வைக்கிறார். கோபியை சாப்பிட சொல்ல கோபி கோபத்தில் அங்கிருந்து எழும்பிச் சென்று விடுகின்றார்.


பின்னர் காலேஜில் பாக்கியா இனியாவுடனும் அவரது ப்ரண்ஸ் கூடவும் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் கோபி இனியாவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகின்றார். அப்போது இனியா பாக்கியா தன்னுடைய பிரண்ஸ் கிட்ட நல்லா பேசுவதாகவும் அவங்க கனவை அடைஞ்சிருவாங்க போலவும் இருக்கு என்று சொல்கின்றார்.

அப்போது கோபி எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் எனக்கும் தான் வெளிநாட்டுக்கு போகனும் என்று ஆசை இருந்தாலும் என்னால போக முடில. உனக்கு என்று ஒரு லைப் இருக்கு அதை யோசிக்காமல் பண்ணிட்டு இருக்கிறா. உனக்கு ஒரு பிரச்சினை என்றால் வீட்டில அம்மா இருந்தால் தானே சொல்ல முடியும் ஆனால் நீ கவலைப்படாத உனக்கு டாடி இருக்கிறேன் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 

Advertisement

Advertisement