பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.மேலும் இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அத்தோடு இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனினும் இந்தத் தொடரில் தற்போது தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு முதல் மனைவியை அறுத்து விட்டது இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வரும் கணவனுக்கு தன் செயலால் பல பாடங்களை புகட்டி வரும் ஒரு மாஸ் பெண்ணின் கதைக்களமாக மாறியிருக்கிறது இந்த பாக்கியலட்சுமி சீரியல்.
இவ்வாறுஇருக்கையில், பாக்யாவின் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி பாக்யாவின் சமையலறையில் அமர்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது பாக்யா எதையோ ருசி பார்க்க சொல்லி பழனிச்சாமிக்கு கொடுக்க அந்த நேரம் யதார்த்தமாக கோபி வருகிறார்.
மேலும் இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த கோபி “நீங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டீங்களா” என்று வயித்தெறிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார்.
Listen News!