• Sep 20 2024

செல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமி- என்ன சேர் பாக்கியா அக்காவை மறந்திட்டீங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இதில் தற்பொழுது கோபியையும் ராதிகாவையும் எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பியே ஆகணும் என்ற எண்ணத்தில் பாக்கியாவும் அவரது குடும்பத்தினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர்.


அதற்காக பழனிச்சாமி தனது நண்பர் ஒருவரிடம் கல்யாண ஆடர் வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.இதனால் பாக்கியா இந்த சமையல் ஆடரை எடுத்து எப்படியாவது சமைத்து அதில் வருகின்ற பணத்தை கோபியிடம் கொடுக்க வேண்டும் என்று இருக்கின்றார்.அத்தோடு எழிலும் செழியனும் கூட பணத்தை கொடுக்க வேண்டும் என்று ஓடித் திரிகின்றனர்.

இப்படியான நிலையில் பழனிச்சாமி,செல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன பழனி சேர் பாக்கியா அக்காவை மறந்திட்டீங்களா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement