• Sep 21 2024

பாலவா அப்படி செய்தார்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ‘குக்வித் கோமாளிநிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னி பெடலெடுக்கும் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 57 எபிசோடுகள் ஒளிப்பரப்பான இந்த 3வது சீசன் மிகப் பெரிய ஹிட் அடித்தது.

மேலும் இந்த சீசனில் அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.அத்தோடு இதில் பல கட்டங்களுக்கு பின்னர் சென்ற ஃபைனல்ஸூக்கு மொத்தம் 6 பேர் தேர்வாகி இருந்தனர்.

குக் வித் கோமாளி 3 இறுதி போட்டி 2 வாரத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதை டிவியில் ஒளிபரப்பு செய்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி காமெடிக்கு பஞ்சமில்லாமல் மக்களைவயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதன் வின்னர் அறிவித்த சமயத்தில் ஸ்ருதிக்கா கண்கலங்கி அழுதார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமும் அங்கு இடம்பெற்றது.

வின்னருடன் சேர்ந்துசமைத்த கோமாளிக்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அந்த வகையில் ஸ்ருத்திகாவின் கோமாளி புகழ் ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டார். முதல் சுற்றில் பாலா தான் அவரின் கோமாளி என்பதும் இதில் முக்கியம். இந்நிலையில் புகழ் தனக்கு வழங்கப்பட்ட 1 லட்சத்தை வாங்க மறுத்தார்.

அத்தோடு அந்த பணத்தை பாலா படிக்க வைக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக தூக்கி கொடுத்தார். இதனால் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் முதல் சுற்றில் ஸ்ருதிக்காவுக்கு கோமாளியாக இருந்த பாலாவுக்கும் 1 லட்சம் கொடுக்கப்பட்டது.

அத்தோடு கடைசியில் ஸ்ருதிக்காவும்அந்த குழந்தைகளின் படிப்புக்காக 1 லட்சம் வழங்குவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். மேலும் பாலா சென்னையில் இருக்கும் பிரபல ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement