ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் அண்ணா. இத்தொடர் குடும்ப பாசப்பிணைப்பினையும், குடும்ப பின்னணியையும் கதையாக கொண்டதனால் இச் சீரியலிற்கு மௌசும் அதிகமாகவே இருக்கின்றது.
அண்ணா சீரியலில் கடந்த வாரம் பரணி திருமணம் நடந்தது, எதிர்பாராத திருப்பத்துடன் பரணியின் டாக்டர் மாப்பிள ஓடி போக பரணியின் அண்ணன் முத்துப்பாண்டி ஏகப்பட்ட குழப்பம் செய்ய எக்கச்க்க அடிதடியுடன் யாரும் எதிர்பாராத ஒரு டுவிஸ்ட் நடந்திச்சு , அதுதான் பரணி சண்முகத்தோட திருமணம். திருமணம் முடிஞ்ச கையோட நம் சண்முகத்த பரணி ஏத்துக்கவே இல்லை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க,
அடுத்தகட்டமாக சண்முகத்தோட அம்மாட உத்தரவுக்கமைய சண்முகம் பரணியை தனது வீட்டுக்கு கூட்டி போக சீர் தட்டுக்களுடன் ஊர் மக்ளுடன் நாதஸ்வர இசை முழங்க சும்மா அட்டகாசமா பரணி வீட்ட வாறாரு, கோபமடைந்த பரணி விட்டாங்க பாருங்க சண்முகத்தோட கன்னத்தில ஒரு அடி அப்பிடியே எல்லாரும் ஆடிபோயிட்டாங்க, அப்போ நம்ம சண்மும் சிரிச்சிட்டே நம்ம வீட்டுக்கு போகலாம் வா? என கூப்பிட பரணி சொன்னாங்க பாருங்க ஒரு விசயம் அது என்னான்னா சினிமால வாற போல தாலிய கழட்டி கையில கொடு எண்டு கேள் . கழட்டி தாறன் கொண்டுபோ எண்டு மிரட்ட பரணிட அம்மா அப்பிடி செய்ய வேண்டாம் என கூற , அப்பாே சண்முகத்த போகசொல்லு என கத்தி சண்முகத்த திருப்பி அனுப்பிடுறாங்க பரணி, இப்பிடி பல பிரச்சினைகள் போய்கிட்டிருக்கு நம்ம சண்முகத்தோட குடும்பத்தில். இந் நிலையில் வரும் சண்டே அண்ணா சீரியல் ஷ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
சண்டே ஸ்பெஷலுக்கான ப்ரோமேவில் பஞ்சாயத்துக்கான தேர்தலில் நம்ம அண்ணா, அதாங்க ஹீரோ போட்டியிடுறாரு, அதே போல நம்ம ஹீரோயினுடைய அப்பா சௌந்திர பாண்டியும் போட்டியிடுறாரு, சண்முகம், சௌந்திர பாண்டி இரண்டு பேரும் நேருக்கு நேர் முட்டி மோதி டீல் வைக்கிறாங்க அது என்ன ? தெரியுமா சண்மும் ஜெயிச்சா பரணியை சண்முகத்தோட வாழ அனுப்பனும், முத்துப்பாண்டி, சௌந்திர பாண்டி ஜெயிச்சா ரத்னாவை முத்துபாபாண்டிக்கு கட்டிவைக்கனும் அதான் டீலு. இது தெரிஞ்சு அவங்கட வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் , காமொடிகள் என விறு விறுப்பான கட்டங்களுடன் சண்டே ஸ்பெஷல் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!