• Sep 20 2024

கலகலப்பாக கோவிலுக்கு செல்லும் பாண்டியனின் குடும்பம்! வீட்டிற்கு வரவுள்ள மருமகள்களால் சிதறுவார்களா? வெளியான ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து அதன் 2ம் பாகத்திற்கான ப்ரோமோ வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும்  மேலும் வலுசேர்த்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில்  ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது. 

இதனையடுத்து சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், சீசன் 2 விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ஸ்டாலின் முத்துவை தவிர அனைவரும் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளனர். 

குறிப்பாக சுஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை.இதனிடையே இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் அஜய் ரத்னம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதேபோல,  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அப்பா வாங்கி கொடுத்த சட்டையை போட்டுகொண்ட மூன்று மகன்களும், அம்மா மற்றும் மகளென அனைவரும் குடும்பமாக கோவிலுக்கு செல்கின்றனர்.


கோவிலுக்கு சென்ற அவர்கள் சாமி கும்பிட்டு முடிக்கையில், அவ்விடத்திற்கு வந்த ஊர்த் தலைவர்கள், 'ஏன்பா பாண்டி உன்ட குடும்பத்த நல்ல கட்டுப்பாட்டில வச்சிருக்க, ஊருக்குள்ள உங்க பிள்ளைகளை போல யாரையும் பாக்க முடியுமா? கிழிச்ச கோட்ட தாண்டாத பிள்ளைகள்' என கூறுகின்றனர்.

இதற்கு பாண்டி, 'பிள்ள என்டு வளத்தா என்ன போல வாழ்க்கணும்' என்டு சொல்ல, 'இதுல என்ன பெரும இருக்கு உன்ட 3 பிள்ளைகளுக்கும் கல்யாணத்த பண்ணிப்பாரு அப்புறம் தெரியும் உன்ட மவுசு' என ஊர்த்தலைவர்கள் கூற, இப்ப சொல்லுறன் கேளுங்க, 'என்ட பிள்ளைகளுக்கு கலியாணம் செய்து மருமகள்கள் வந்தாலும் அப்பையும் நான் கிழிச்ச கோட்ட இந்த வீடு தாண்டாது வேணும்னா பொறுத்திருந்து பாருங்க' என அவர்களுக்கு பெருமையாக சொல்லிச் செல்கிறார் பாண்டியன். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement