• Sep 21 2024

நிறைவேறியது சொந்த வீடு கனவு - புதுமனை புகுவிழா கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்...வெளிவந்த ப்ரோமோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் அழகாக நகர்கின்றது. 

டி.ஆர்.பி ரேட்டிங்கில் கூட உச்சத்தில் இருந்து வந்த இந்த சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும் வகையில் தற்போது சில நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக தனத்துக்கு கேன்சர் என்றும் அதற்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது

இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது .அதில் நடுத்தர மக்களின் சொந்த வீடு என்பது பெரிய கனவு.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்பம் தங்களுக்கென சொந்த வீடு கட்டி புகுமனை புகுவிழா கொண்டடாட போவதாக அமைந்துள்ளது.


அந்தவகையில் புது வீட்டிற்கு எல்லாரும் வருகிறார்கள் .ரொம்ப பதற்றமா இருந்திச்சு என ஜீவா கூற ,அதற்கு கதிர் நாங்க நாலு பேரும் சேர்நது தொடங்கின எந்த வேலை முடியாம இருந்திருக்கு..என கதிர் கூறுகிறர்.


அடுத்து மூர்த்தி எப்படி இருக்கு வீடு என்று கேட்க அதற்கு தனம் சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார்.எல்லாரும் சேர்ந்து ரிப்பன கட் பண்ண சொல்லுகிறார்கள்.மீனா ''உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல தனம் ரிப்பனை கட் பண்ணி ஷாக் ஆகிறார்.ஏன் என்னுடைய பேர வைச்சீங்க என்று கேட்க..எல்லாரும் ஆசைப்பட்டாங்க அதே பேரு இருக்கட்டும் என்று மூர்த்தி சொல்லுகிறார்.இவ்வாறாக அடுத்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.


எனவே பொறுத்திருந்து பார்ப்போம் இத்துடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடைகிறதா என்று...


Advertisement

Advertisement