விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..
அதாவது தனம் கடைக்கு போவதற்கு அவசரம் அவசரமாக சாப்பாடு சாப்பிடுகின்றார்.அதற்கு ஏன் இவ்வளவு அவசதம் என்று மூர்த்தி கேட்க நான் கடைக்கு போகனும் மாமா அது தான் என கூறுகின்றார்.பின்னர் தனது மகனையும் அழதை்து செல்வதற்கு ரெடியாக மீனா நாங்க குழந்தையை பார்த்துகிறோம் நீங்க போங்க என கூற .இல்லை நீங்க சமையுங்க நானே பார்த்துகிறேன்.அவனை விட்டுட்டு போன மனதிற்கு ஒரு மாதிரி இருக்கும் என கூறுகின்றார்.அதற்கு மீனா திட்டிவிட்டு நாங்க பார்த்துக்கொள்ள மாட்டோமா என பேசிவிட ஜசுவும் அப்படியே கூறுகின்றார்.
அதற்கு தனம் நீங்க இரண்டு பேரும் சண்டை பிடிக்காம சமைத்து வையுங்கள் என கூறிவிட்டு கடைக்கு செல்கின்றார்.அது ஒரு புறம் இருக்க மீனாவும் ஜசுவும் யார் சமைப்பது யார் பாத்திரம் துலக்குவது என சண்டை இடுகின்றனர்.அதற்கு கண்ணன் வந்து அண்ணி தானே காய்கறி எல்லாம் கட்பண்ணிட்டு போயிருக்கிறாங்க நீங்க இரண்டு பேரும் ஏன் சண்டை பிடிக்கிறீங்க எண்டு இருவரையும் சமாதானப்படுத்தி ஆளுக்கொரு வேலையாக கொடுத்து விடுகின்றார்.
பின்னர் ஜசு நீ வேலைக்கு போப்போறேன் என்றாய்.அதற்கு போகவில்லையா எனக் கேட்க .இல்லை நான் பின்னேரம் போகப்போறேன் என கூறுகின்றார்.இல்லை இப்பையோ போ என கூற அவரும் போய்விடுகின்றார்.இந்நிலையில் கடையில் விலை கூட பில் போட்டுவிட்டதாக கடைக்கு வந்த நபர் சண்டை போட அங்கே மக்கள் குவிந்து விடுகின்றார்.இவ்வாறு இருக்கையில் தனத் அங்கே வந்து என்ன பிரச்சனை என கேட்க அந்த நபர் இப்படியா செய்வது நீங்க மூர்த்தியை கூப்பிடுங்க என கேட்டு சத்தம் போட அதற்கு தனம் அவருக்கு உடம்பு சரியில்லை அவர் வர மாட்டார். நான் தான் கடையை பார்த்துக்கிறேன் என கூறுகின்றார்.
அதற்கு அவர் நடந்த விசயத்தை கூற அப்படி இருக்காதே என கூறி பின்னர் எங்கட பில் போடுற மிசினால் தான் இப்படி நடந்திட்டு.இனிமேல் அப்படி நடக்காது என கூறி மன்னிப்பு கேட்கின்றார்.அதற்கு அவரும் இதில் என்னம்மா இருகடகு எனக்கூறி சமாதானம் ஆகிவிடுகின்றார்.
இது ஒரு புறம் இருக்க ஜசு போன காரியம் என்ன மாதிரி எனக் கேட்க அது சரியாகி விட்டது.ஆனால் அதற்கு 50000ரூபா பணம் கேட்கிறாங்க என கூறுகின்றார்.அதற்கு என்ன அது தானே பார்த்துக்கெல்லாம் என கூற எப்படி முடியும் வீடு இருக்கிற பிரச்சனைக்கு எனக் கூற அது பார்த்துக்கெல்லாம் என ஜசு கூறுகின்றார்.
இவ்வாறு இருக்க இங்காலே குமரன் வேலை செய்யும் இடம் பற்றி காட்டப்படுகின்றது.அந்தக் கடைக்கு ஜீவா திடீரென சரக்கு இறக்க வருகின்றார்.இவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்களா என விறுவிநுப்புடன் அந்தக்கட்டம் காட்டப்பட தீடீரென ஜீவாவை குமரன் பார்த்து விட்டு ஒளித்து விடுகின்றார்.அதற்கு முதலாளி திட்டி விட இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
பிற செய்திகள்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!