விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விரைவில் முடிவுக்கும் வரவுள்ள சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஹாஸ்பிட்டலில் இருக்கும் பிரசாந்த், கதிரும் ஜீவாவும் சொத்தை தங்களுடைய பெயருக்கு மாற்றித் தரச் சொல்லி தன்னுடைய மாமாவிடம் சண்டை போட்டதாகவும் தான் தடுக்க முயற்சி செய்த போதும் மாமாவை குத்தி விட்டனர் என்றும் போலீஸில் வாக்கு மூலம் கொடுக்கின்றார்.
இதை மறைந்து நின்று கேட்ட மீனா கோபமாக தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஆடைகளையும் எடுத்துக் கொண்டு கீழே வந்து தனத்திடம் இருந்து கயலைப் பறிக்கின்றார்.
அப்போது தனம் என்ன ஆச்சு என்று கேட்ட போது இந்த வீட்டில நீங்க எல்லோருமே சந்தோசமாக இருங்க நான் என்னுடைய வீட்டுக்கு போகின்றேன் என்று கயலுடன் கிளம்பிப் போகின்றார்.இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!