விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் இதில் ஒளிபரப்பாகும் சீரியர்களுக்கு என்று மக்கள் மனங்களில் ஒரு தனி இடமே இருக்கின்றது.
அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலானது 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 975 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
முதன் முதலில் தமிழ் மொழியில் உருவாகி வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த சீரியல் ஆனது பின்னர் பல மொழிகளில் ரீமேக் ஆகியிருப்பது தமிழ் சின்னத்திரைக்கு கிடைத்த பெருமை என்று தான் சொல்ல வேண்டும்.
மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சீரியல் கதையில் கதையில் தற்போது அதிரடி மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவதற்காக பல ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளார்கள்.
இவ்வாறான இந்த சீரியலில் சித்ராவின் மரணத்தை தொடர்ந்து முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் வந்த ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் அந்தளவிற்கு பிரபலமாகவில்லை. எனினும் இப்போது தான் முல்லை கதாபாத்திரத்தில் கொஞ்சம் செட் ஆகியுள்ளார்.
அதற்குள் தற்போது அவர் போட்ட இன்ஸ்டா பதிவு ஒன்றினைப் பார்த்து ரசிகர்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதாவது அவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் பிரபலங்களான ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு 'மிஸ் யூ ஆல்' எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் காவ்யா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு விலகுகிறாரா என ஷாக் ஆகியுள்ளனர். இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!