பிரபல நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் திகழ்ந்து வருபவர் பார்த்திபன். இவரே இயக்கி, நடித்து 1989-இல் வெளியான திரைப்படம் 'புதிய பாதை'. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் கதாநாயகியாக இவரின் முன்னாள் மனைவியான சீதா நடித்து இருந்தார்.
இப்படமானது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை அதே பெண் திருமணம் செய்துகொள்வது போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகி இருந்தது. மேலும் இப்படமானது பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.
இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து புதியபாதை படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கப் போவதாக பார்த்திபன் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து சமீபத்தில் இடம்பெற்ற பெட்டியில் பார்த்திபன் கூறுகையில் "புதிய பாதை எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான படம். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
மேலும் "தற்கால டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்க உள்ளேன் படத்துக்கு 'டார்க் வெப்' என்ற பெயர் வைத்துள்ளேன். படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இப்போதே தொடங்கிவிட்டேன்" எனவும் கூறியுள்ளார்.
Listen News!