நடிகர் ஷாருக்கான், பாலிவுட் பாட்ஷாவாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக 4 ஆண்டுகளாக ஷாருக்கான் படங்களில் கவனம் செலுத்தவில்லை. இதனிடையே கடந்த ஜனவரி 25ம் தேதி சர்வதேச அளவில் வெளியான பதான் படம் வசூல் சாதனை புரிந்தது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் போன்றவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியிருந்தாஇந்தப் படம் வெளியான 5 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை பெற்றது.
படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த பாகுபலி 2 மற்றும் கேஜிஎப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து, பாலிவுட்டில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை படக்குழுவினருக்கு ஈட்டித் தந்தது. 5 வாரங்களில் 1026 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது.
இதனிடையே இந்தப் படத்தின் ரிலீசின்போதே, பதான் 2 படம் உருவானால் அதில் நடிப்பதற்கு பெருமை படுவேன் என்று ஷாருக்கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் அடுத்த மாதத்தில் ஜவான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்தப் படத்தை தொடர்ந்து பதான் 2 படத்தில் ஷாருக்கான் கமிட்டாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக ஷாருக்கானின் ஜவான் படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடல் வெளியானது. அனிருத் இசையில் பாடல், ரசிகர்களை வெகவாக கவர்ந்தது. நயன்தாரா, பிரியா மணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் கண்டிப்பாக 1500 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Listen News!