• Sep 21 2024

120 கோடியாக சம்பளம் கொடுங்க….அதிரடியாக சம்பளத்தை கூட்டிய பிரபல நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலமாகவும், நடனத்தின் வாயிலாகவும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கின்றார்.

இவர் பல படங்களில் நடித்திருப்பினும் இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான "பாகுபலி" என்ற படமே. இப்படத்தின் பிரமாண்டமான வெற்றியின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார் பிரபாஸ்.

இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான "சாஹோ, ராதே ஷ்யாம்" ஆகிய படங்கள் தோல்வியினையே சந்தித்தன. ஆனால் அப்படங்கள் தோல்விகளை சந்தித்திருந்தாலும் அவரின் சம்பள விஷயம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர் இதனைத் தொடர்ந்தும் இன்னும் அதிக அளவில் தான் சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரபாஸ் ஓம் ரவுத் இயக்கத்தில் "ஆதிபுருஷ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் "ஆதிபுருஷ்" படத்தில் ராமராக பிரபாஸ் தான் நடிக்கின்றார். ஆரம்பத்தில் "ஆதிபுருஷ்" படத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ. 100 கோடி சம்பளமே பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மேலும் தனக்கு ரூ. 20 கோடி வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.

பெரிய நடிகர்களைப் போலவே பிரபாஸ் திடீர் என்று தன் சம்பளத்தை உயர்த்தியிருப்பது தயாரிப்பாளருக்கு பிரச்சனையாகியிருக்கிறதாக கூறுகின்றார்கள். அதாவது 'ஆதிபுருஷ்" படத்தை ஏற்கெனவே ரூ. 500 கோடி பொருட்செலவில் எடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாது படத்தை விளம்பரம் செய்ய மேலும் செலவாகும் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பிரபாஸின் ஏனைய படங்களை போன்றே இந்த படத்திலும் விஎஃப்எக்ஸ் அதிகமாக இருக்கும். அதனால் நடிகர் பிரபாஸின் கோரிக்கையை தயாரிப்பாளர் இன்னும் ஏற்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement