சாதாரண ஒரு மனிதனாக இருந்து சாதனை படைப்பதென்பது மிகப்பெரிய ஒரு விஷயம் தான். அந்தவகையில் பஸ் கண்டெக்டராக இருந்த ஒருவர் தன்னுடைய ஸ்டைலால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி, கோலிவுட் திரையுலகுக்கே சூப்பர்ஸ்டார் ஆகுறது என்பது சாதாரண ஒரு விஷயம் கிடையாது.
அதுமட்டுமல்லாது அப்படி ஒரு உச்சத்துக்கு போயும் இன்னும் ஒரு எளிமையான மனிதனாக இருப்பது என்பது யாராலும் நம்ப முடியாத அசாத்தியமான ஒன்று.
இப்படி அசாத்தியத்தை சாத்தியப்படுத்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் தனது 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்தவகையில் அவர் குறித்த பல பழைய தகவல்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.
தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகர்கள் வறுமையை வென்று தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்.
மேலும் ரஜினி தனது ஆரம்ப காலகட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டபோது அவருக்கு உதவியவரை பற்றியும், அதற்கு நன்றிக்கடனாக ரஜினி செய்த உதவியை பற்றியும் தற்போது பார்க்கலாம்.
அந்தவகையில் தற்போது சென்னையில் இருக்கும் செம்மொழிப் பூங்கா தான் தமிழ் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்கிற வெறியோடு வந்த ஏராளமானவர்களின் கூடாரமாக அமைந்திருந்தது.
அந்த காலத்தில் அது டிரைவ் இன் உடைய ஒரு ரெஸ்டாரண்டாக இருந்துள்ளது. ஆரம்பகாலத்தில் வறுமையில் இருந்த ரஜினியை பசியாற்றியது அந்த இடத்தில் இருந்த உட்லாண்ட்ஸ் என்ற ஒரு ஹோட்டல் தானாம்.
அதாவது ரஜினி கஷ்டப்பட்ட காலத்தில் பெரும்பாலும் அவருக்கு காலை மற்றும் இரவு உணவு கொஞ்சமும் இருக்காதாம். ஒரே ஒரு வேளை, அதுவும் மதியம் மட்டும் தான் சாப்பிடுவாராம் ரஜினி.
இவ்வாறாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒருவேளை உணவை மட்டும் சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு அந்த ஹோட்டலில் சர்வராக பணியாற்றிய நாராயண ராவ் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஜினி சாப்பிட வந்தால், உடனே ஸ்பெஷலாக கவனிப்பாராம் நாராயண ராவ். சொல்லப்போனால் அந்தக்காலத்தில் ரஜினிக்கு தாயுமானவனாக இருந்தது அவர் தான்.
இப்படி பயங்கர பசியோடு வரும் ரஜினிக்கு உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வைத்து பசியாற்றுவாராம் நாராயண ராவ். ஒருசில நாட்களில் ரஜினியால் காசு கொடுக்க முடியாத நிலை ஏற்படுமாயின் அந்த நேரத்தில் எல்லாம் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறு சொல்லுவாராம் நாராயண ராவ்.
பின்னர் ரஜினி தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் நடிக்கத்தொடங்கி மெல்ல மெல்ல வெற்றியடைந்து இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டார். அந்த சமயத்தில் ரஜினிக்கு நாரயண ராவ்வின் நினைவு வந்து, அவரைத்தேடி அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்துள்ளார்.
ஆனால் அவர் பல வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறியதை அடுத்து தான் படங்களில் பிசியாக இருந்ததால், தன் நண்பர்களை வைத்து நாராயண ராவ் எங்கு இருக்கிறார் என்று விசாரிக்க சொல்லியுள்ளார் ரஜினி.
இவ்வாறான நீண்டகாலத் தேடலுக்கு பின் நாராயண ராவ் உடுப்பியில் இருப்பதை கண்டு பிடித்துவிடுகிறார்கள். உடனடியாக அவரை சந்திக்க ரஜினி தானே நேரில் சென்றுள்ளார். அப்போது அங்கு மிகவும் வயதான தோற்றத்தில் இருந்துள்ளார் நாராயண ராவ். அவரின் ஏழ்மையான தோற்றத்தைப் பார்த்த ரஜினி மிகப்பெரிய தொகையை அவரது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு அதன்மூலம் வரும் வட்டியின் மூலம் அவர் குடும்பத்தை நடத்தும் வகையில் ஒரு பெரும் உதவியை செய்தாராம்.
அதுமட்டுமல்லாமல் நாராயண ராவ்வின் மகனுக்கு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை ஒன்றினையும் வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினி. இவ்வாறாக கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு உதவிய நாராயண ராவ் போன்ற பலருக்கும் வெளியில் தெரியாமல் பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம் ரஜினி.
Listen News!