• Sep 20 2024

தனது மனைவியுடன் இணைந்து சூர்யாவை சந்தித்த சாண்டி... அதுவும் எங்கு தெரியுமா..? வெளியான புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் இறுதியாக 'விருமன்' படம் உருவாகி இருக்கின்றது. முத்தையா இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது வசூலைக் குவித்து லாபத்தையும் ஈட்டியுள்ளது.


கார்த்தி நடித்த படங்களிலேயே நல்ல ஓபனிங்கை கொடுத்த படமாக 'விருமன்' அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அதிதி, சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.


இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்த கஞ்சாப்பூ கண்ணால, மதுரை வீரன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தன. இதில் 'வானம் கிடுகிடுங்க..' என்ற பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனத்தை வடிவமைத்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் 'விருமன்' படத்தின் சக்சஸ் மீட் இடம்பெற்றிருந்தது. இதில் படக்குழுவினர் உட்படப் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் சூர்யா, சாண்டி மாஸ்டர் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கலந்திருந்தனர்.


அந்நிகழ்வில் சூர்யா, சாண்டி மாஸ்டரிற்கு கை கொடுத்து வரவேற்றிருக்கின்றார். அதுமட்டுமல்லாது அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்த சாண்டி மாஸ்டர், அவற்றை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்திருக்கின்றார்.

அத்தோடு அப்புகைப்படங்களிற்கு கீழே "பமிலி டைம்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

Advertisement

Advertisement