• Sep 20 2024

சுருதி எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்-இன்று திருமண பந்தத்தில் இணைந்த சீரியல் நடிகையின் கணவரின் பேச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் பல ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 2010-ல் இருந்து 2015 வரை சன்டிவியில் ஒளிபரப்பாகிய முக்கிய சீரியல் தான் நாதஸ்வரம்.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை தான் ஸ்ருதி சண்முகப்பிரியா, இவர் இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்.

இந்த நிலையில் இன்று இவருக்கும் அரவிந்த் சங்கர் என்பவருக்கும் பிரமாண்டமாகத் திருமணம் நடந்து முடிந்தது.அவர்களின் திருமணத்தில் ரோஜா சீரியல் பிரியங்கா, ஸ்ரீதேவி அசோக், காவ்யா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பேசிய அரவிந்த் "இந்த வெற்றிக்காக சுருதி பெரிய தியாகம் செய்துள்ளார், நான் செய்யவேண்டியதெல்லாம் முழு அர்ப்பணிப்புடன் விட்டு கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே" என பேசியிருப்பதும் குறிப்பிடத்தகது.

Advertisement

Advertisement