• Sep 20 2024

21 வயதில் அம்மாவாக நடித்தது மிகவும் பதற்றமாக இருந்தது- உண்மையை வெளிப்படையாகக் கூறிய யாஷிகா ஆனந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநராக அறிமுகமாகி தற்பொழுது சிறந்த வில்லன் நடிகராக தன்னை மாற்றிக் கொண்டு வலம் வருபவர் தான்
எஸ்ஜே சூர்யா, அந்த வகையில் மெர்சல் ஸ்பைடர் மாநாடு டான் போன்ற படங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இது தவிர நாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கடமையை செய் . இப்படத்தில் யாஷிகா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். கணேஷ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரமேஷ் தயாரித்துள்ளார்.

இப்படம் இந்த மாதம் 12ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படத்தில் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ள நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா இந்தப் படத்தில் நடித்தபோது தனக்கு 21 வயது என்றும் அந்த வயதிலேயே ஒரு குழந்தையின் அம்மாவாக தான் படத்தில் நடித்ததாகவும் இதனால் மிகவும் பதற்றமாக உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்ததும் தன்னுடைய பதற்றத்திற்கு மற்றொரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை நம்பி இதுபோன்ற வெயிட்டான கேரக்டரை கொடுத்த வெங்கட் ராகவனுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்தது தினந்தோறும் பரீட்சை எழுதியதை போன்ற அனுபவத்தை கொடுத்ததாகவும் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement