டிக் டாக் செயலி மூலம் பிரபல்யமானவர் தான் இலக்கியா.கவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.இதனால் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அதன் படி நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அது இல்லாமல் வேறு சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் நடிகை ஷகிலாவின் கேள்விக்கு பதில் அளித்த இவர், மனம் விட்டு பல விஷயத்தை பேசி இருந்தார்.இந்நிலையில், தனது பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கப்பட்டு மோசடி நடப்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், எல்லாருக்கும் வணக்கம் என்னோட பெயரில் கடந்த மூன்று, நான்கு வருஷமா ட்விட்டரில் பேக் அக்கவுண்ட் உலவி வருகிறது. அது என்னுடைய அக்கவுண்ட் கிடையாது. இன்ஸ்டாகிராம் பலர் எனக்கு இதுகுறித்து மெசேஜ் அனுப்பி இருந்தாங்க, அது உங்க அக்கவுண்ட்டுனு நினைச்சு பணம் அனுப்பிவிட்டேன் என்று, எனக்கும் அந்த போலி அக்கவுண்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அந்த ட்விட்டர் அக்கவுண்டில் ப்ளு டிக் இருக்கு என்பதற்காக அது எல்லாம் என்னுடைய அக்கவுண்டாகவிடாது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற ஒரு பிரச்சனையைத்தான் நான் சந்தித்தேன். இது போன்று போலி கணக்கை தொடங்கி ஏமாற்றிவிடுகிறீர்கள். ஆனால், இதனால், எனக்குத்தான் மன வேதனையும் கஷ்டமும் ஏற்படுகிறது. இனிமேல் தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.
இன்ஸ்டாகிராம், பேஸ் புக்,ட்விட்டர் என என் பேரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்து சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்போகிறேன். நீங்களும் யாரு என்னனு தெரியாம பணத்தை அனுப்பி அதற்கு நான் தான் காரணம் என்று தயவு செய்து சொல்லாதீங்க என்று நடிகை இலக்கியா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Listen News!