திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பிஸியான நடிகையாகவும் உள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் சாணிக் காயிதம் படம் வெளியானது. அமேஸான் பிரைம்மில் வெளியாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி அடுத்து கைவசம் பல பெரிய படங்கள் வைத்து இருக்கிறார். சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் சற்று க்ளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இன்று குழந்தைகள் தினம் என்பதால் தான் வளர்ந்து வரும் நாய் உடன் எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'My Son' என நாயை தான் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு போட்டோ குடுடா என கீர்த்தி சுரேஷ் நாயிடம் கெஞ்சினாலும், அது இவரை கண்டுகொள்வதாக இல்லை. நீங்களே வீடியோவில் பாருங்க
Listen News!