கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சாகோ என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவூட் நடிகை ஷ்ரத்தா கபூர்.இவருக்கு சித்தாந்த கபூர் என்ற ஒரு சகோதரரும் உள்ளார்.
அந்த வகையில் பெங்களூரில் எம்ஜி சாலையில் உள்ள ஹோட்டலில் பார்ட்டி நேற்று இரவு நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட சித்தாந்த கபூர் போதை பொருளுக்கு குற்றச்சாட்டின் பெயரில் பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து போதைப் பொருள் கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் மாதிரிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். அதில் 6 பேர் போதை பொருள் உட் கொண்டது உறுதியாகியுள்ளது. அதில் நடிகை ஷ்ரத்தா கபூர் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டு வந்தார்களா? அல்லது ஹோட்டலில் உட்கொண்டார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த வழக்கில் கட்டுப்பாட்டு பிரிவினரால் விசாரிக்கப்பட்டவர்களில் நடிகை ஷ்ரத்தா கபூரும் ஒருவர். எனினும் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!