தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் தான் மணிரத்னம்.இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்போது வரை படம் சில திரையரங்குகளில் ஓடிவருகின்றது.
மேலும் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று சென்னையில் படத்தின் வெற்றி விழா நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 ஆம் தேதி என இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.மேலும் இவ் வெற்றி விழாவில் பொன்னியின் செல்வன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!