மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் திரையுலகின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்தது. அத்தோடு கலவையான விமர்சனம் படத்திற்கு சற்று பின்னடைவை கொடுத்தது. ஆனாலும், முதல் நாளில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் பொன்னியின் செல்வன் வெளிவந்த 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த 5 நாட்களில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.அத்தோடு முதல் 4 நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 5வது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது.
இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால், நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு நல்ல மக்கள் கூட்டம் வந்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!