ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 2. இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து 4 நாட்கள் வரை நல்ல வசூல் செய்தது. ஆனால், கடந்த 2ஆம் தேதியில் இருந்து மெல்ல மெல்ல இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் குறைய துவங்கியது.
கலவையான விமர்சனம் தான் இதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. முதல் பாகம் போல் இப்படம் விறுவிறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் அனைவரும் சற்று ஏமாற்றமடைந்தனர்.
இப்படம் வெளிவந்த 8 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 255 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 93 கோடி வரை வசூல் செய்துள்ளது.
குறைந்த நிலையில் இருந்த இப்படத்தின் வசூல் நேற்றில் இருந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன்முலம் இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக இப்படம் ரூ. 300 கோடியை தொடும் என கூறப்படுகிறது. இதனால் படக்குழு செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!