எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மாபன் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது தான் மக்களுடைய விமர்சனமாக இருக்கிறது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறி வருகிறார்கள். இதனால் முதல் 4 நாட்கள் நல்ல வரவேற்பில் இருந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கிவிட்டது.
இவ்வாறுஇருக்கையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 265 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அத்தோடு தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடியை கடந்து திரையரங்கில் ஓடி வருகிறது.
ஆனால், படக்குழு எதிர்பார்த்த வசூல் இதுவரை வரவில்லை என சொல்லப்படுகின்றது. முதல் மொத்தமாக உலகளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்தது. அந்த வசூல் சாதனையை இப்படம் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!