மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், 600 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.
இதனால், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே போனது. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் களைக்கட்டின. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவும் கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, சென்னை என ரவுண்டு அடித்து வருகின்றனர்.
இதனிடையே பொன்னியின் செல்வன் 2 வரும் 28ம் தேதி வெளியாவதால், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் எல்லாமே ரிலீஸில் இருந்து விலகிவிட்டன. இதனால் ஒன்மேன் ஆர்மியாக களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 டிக்கெட் புக்கிங் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகின்றன.
முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 5 கோடி வரை கலெக்ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டன. அதேபோல் உலகின் மற்ற பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் அட்வான்ஸ் புக்கிங் வேகமெடுத்துள்ளதாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 5 கோடி வரை முன்பதிவு நடந்துள்ளதாம்.உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.
Listen News!