பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்தப் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாள்களுக்குள்ளாகவே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளன.
இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சென்றுவருகின்றனர். நேற்றுகூட டெல்லிக்கு அவர்கள் சென்றிருந்தனர்.இப்படி இருக்க படத்தின் புரோமோஷனில் கலந்துகொள்வதற்கு நடிகர் விக்ரம் கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு புரோமோஷனில் கலந்துகொள்ள நாங்கள் வரவேண்டுமென்றால் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என லைகா நிறுவனத்திடம் விக்ரம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் படக்குழுவினர் மும்பைக்குச் சென்றுள்ளனர். அங்கே நடு வீதியில் நின்று குல்பி ஐஸ் சாப்பிட்டிருக்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் பஃன் பண்ணிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.
Listen News!