கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற அந்தத் திரைப்படமானது உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கும் சூழலில் அது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கனடா திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் இன்று ஹாங்காங்கில் நடைபெற்ற 16ஆவது ஆசிய திரைப்பட விழாவிலும் போட்டியிட்டது. அதன்படி, சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் 6 பிரிவுகளில் நாமினேஷன் ஆனது பொன்னியின் செல்வன்.
ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருப்பதால் நிச்சயம் குறைந்தபட்சம் இரண்டு பிரிவுகளிலாவது பொன்னியின் செல்வன் விருது வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரு பிரிவில்கூட பொன்னியின் செல்வன் திரைப்படம் விருதை வெல்லாதது ரசிகர்களிடையேயும், படக்குழுவினரிடையேயும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!