கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்.
இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.இதையடுத்து இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு விமானத்தில் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் த்ரிஷா கார்த்தி ஜெயம் ரவி ஆகியோர் பயணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!