ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் விக்ரம் த்ரிஷா ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இன்னும் பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படவுள்ளது.
இத் திரைப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில், ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் நம் படம்! தமிழர்கள் படம்!! என கூறினார். இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் படம் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாடலை இடம்பெறும் பொன்னி நதி, இன்று காவிரி நதியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியாது என அனைவரும் கூறினார்கள். அதேபோல் படம் ஆரம்பித்ததும் கொரோனா வந்தது. இருந்தாலும் மணிரத்னம் முடிப்பார் என அனைவரும் நம்பினோம். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 120 நாட்களில் படமாக்கி முடித்து விட்டோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பொன்னி நதி பாடல் மூலம் இளங்கோ என்ற புதியவருக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்தப் பாட்டை கேட்கும் பொழுது சோழ நாட்டுக்குள்போன உணர்வு இருந்தது என கார்த்தி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பலமுறை மன்னிப்புக் கேட்ட வில் ஸ்மித் ,கலாய்த்து தள்ளிய கிறிஸ் ராக்: பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல
- அஜித்தின் வெற்றியின் சீக்ரெட் இது தான்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறிய முக்கிய டிப்ஸ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!