• Sep 21 2024

பொன்னியின் செல்வன் படத்தின் மாஸ் அப்டேட் …!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியு, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அத்தோடு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து அனைவரையும் சிலிர்க்க வைத்தது. Youtubeல் தற்போது தொடர்ந்து பல சாதனைகளையும் புரிந்து வருகிறது.இந்த நிலையில் சற்று முன்னர் லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகிய இருவரும் பின்னணி இசை அமைக்கும் காட்சி உள்ளது .மேலும் இந்த காட்சி காண்போரை அசத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement