ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் மொத்தம் 50 கேரக்டர்கள் உள்ளதாகவும், இதில் 15 பேர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒரு மாதகாலமே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த நிலையில் ஷுட்டிங் முடிந்து படம் ரிலீசாக போகிற சமயத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராயின் பிடிஎஸ் போட்டோ லீக்காகி உள்ளது.
ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோரின் பிடிஎஸ் போட்டோக்களும் லீக்கானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஒளிப்பதிவாளர் ரவி வர்மா உடன் டாப் நடிகர்கள் இருக்கும் போட்டோ தான் தற்போது லீக்காகி உள்ளது. இதை படக்குழு வெளியிடாத நிலையில் யார் இணையத்தில் வெளியிட்டார்கள் என தெரியவில்லை.
பட்டுடையில் நிறைய நகைகளுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது.இந்த போட்டோ தாறுமாறாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!