தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
அதாவது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.
மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, சிறந்த விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
உலகமெங்கும் இப்படத்திற்கு ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில் இப்படமானது முதல் நாளிலேயே வசூலை வாரிக் குவித்து உள்ளது. அந்தவகையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த இப்படமானது இதுவரை சுமார் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் உலகளவில் இதுவரை ரூ. 510 கோடி வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் வசூல் முழு உலகையுமே திரும்பிப் பார்க்க வைத்து விட்டது எனக் கூறி வருகின்றனர்.
Listen News!