கடந்த சில மாதங்களிற்கு முன் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இப்டம் பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியிருந்தது.
சந்தன மக்கட்டை கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்ததோடு பஃகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த பூஜையில் இயக்குனர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்க உள்ளார் என்பதும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அத்தோடு அல்லு அர்ஜூன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் நாடு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பூஜையில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா இருவருமே மிஸ்ஸிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!