நடிகர் தனுஷ் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாக இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யாவும் பல ஆண்டுகளுக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தில் ரஜினி செம மாஸான ரோலில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது இபபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தை பற்றி பல வதந்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது இப்படத்தில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட மோதலால் படத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து இப்படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷாலுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவரும் இப்படத்தை விட்டு வெளியேற இருக்கின்றார் என்றும் ஒரு தகவல் பரவி வருகின்றன.
ஆனால் விஷ்ணு விஷால் தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தான் வருகின்றார். இதைவைத்து பார்க்கையில் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தன் ஐம்பதாவது படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வந்தன. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருக்குமாம். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பும் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடக்க இருப்பதால் விஷ்ணு விஷாலால் தனுஷின் படத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம். இரு படங்களும் தனக்கு மிக முக்கியமான படங்கள் என்பதால் விஷ்ணு விஷால் தற்போது குழம்பி வருகிறாராம். லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஷ்ணு விஷால் அநேகமாக தனுஷ் படத்திலிருந்து விலகும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!