கனடாவை சேர்ந்த பிரபல நடிகரான செயின்ட் வான் குலோசி. 2015 ஆம் ஆண்டு திரைத்துறையில் விளம்பர மாடலாக அறிமுகமானார். நடிப்பின் மீது தீராத ஆசை கொண்ட இவர் 2019ஆம் ஆண்டு கனடாவில் இருந்து தென் கொரியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு வந்த பிறகு ஒரு சில பாடல்கள் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாது இசைக்கலைஞர் ஆகும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பிரபல தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் குழுவின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட செயின்ட் வான் குலோசி அந்த குழுவின் முக்கிய நபரான ஜிமினின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். அந்த விடயம் தான் அவரது உயிரிழப்புக்கும் காரணமாகியுள்ளது.
அதாவது ஜிமினின் பெரிய ரசிகரான இவர், அவரைப் போலவே மாற வேண்டும் என்று ஆசைப்பட்டு இதற்காக முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை, மூக்கிற்கான அறுவை சிகிச்சை, உதட்டில் உள்ள தசையை குறைக்கும் சிகிச்சை, கண்களுக்கான சிகிச்சை என மொத்தம் 12 முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த சிகிச்சைகளுக்காக இவர் இதுவரை இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவு செய்துள்ளதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். இவ்வாறு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதால், சில மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகளால் செயின்ட் வான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்று அறுவை சிகிச்சைக்காக செயின் வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிகிச்சையை தொடர்ந்து அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஆடுதல் சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ள இந்த இளைஞர் இதற்கு எப்படி இருந்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது அந்த நடிகருக்கு பொன்னிறத்தில் முடி இருந்ததாகவும் அவரது கண்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் அவர் 6 அடி வரை உயரத்துடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு தாடை மாற்று அறுவை சிகிச்சையால்தான் இப்போது அந்த நடிகர் உயிரிழந்துள்ளார். ஆனால், அந்த சிகிச்சையில் இருக்கப்போகும் ஆபத்துகள் குறித்து அவருக்கு முன்னரே தெரிந்திருந்தும் அதற்கு ஒப்புக்கொண்டாராம்.
ஏனெனில் அவரது தோற்றம் குறித்து அவருக்கு தாழ்வு மனப்பான்மை பல காலமாக இருந்ததால் ஜிமின் போல மாற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தாராம். அதுமட்டுமல்லாது செயின் வான் தென் கொரியாவிற்கு வந்த புதிதில் அவருக்கு வேலை கிடைக்கவில்லையாம். அதாவது இந்த நாட்டில் அனைவரும் ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இவர் அவர்களைப் போல இல்லாததால் அவரை மற்றவர்கள் பாரபட்சத்துடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
எது எவ்வாறாயினும் பிரபல இசைக்கலைஞர் போன்ற தோற்றத்திற்கு ஆசைப்பட்டு பிரபல நடிகர் உயிரிழந்துள்ள இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!